5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டக் குழு சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.சரவணன், மாவட்ட துணை நிர்வா கிகள் கோபால், இளங்கதிர், தங்கமணி, தங்கராஜ், நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநில துணைத் தலைவர் ஆர்.பிரகாஷ் கண்டன உரையாற்றினர். முடிவில், மாவட்ட நிர்வாகி கோபால் நன்றி கூறினார்.