tamilnadu

பள்ளிக் கல்வித்துறையின் புது உத்தரவால் அவதிக்குள்ளாகும் பெற்றோர், மாணவர்கள்

சீர்காழி, மே 20-பள்ளி மாற்றுச்சான்றிதழில் சாதிப் பெயர் குறிப்பிட வருவாய்த்துறை சான்றிதழ் மட்டுமே போதுமானது எனத் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வருவாய்த்துறையில் சாதிச் சான்று கேட்டால் அவர்கள் பள்ளிச் சான்றிழை விண்ணப்ப படிவத்தில் இணைக்கச் சொல்கிறார்கள். எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிச் சான்றிதழ் கேட்காமல் சாதி சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.கல்வித்துறையை ஒருங்கிணைக்கும் இணையதள சேவையில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளின் இணைப்பு பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. இந்த இணையத்தில் அவைகளை இணைக்காமல் விடுவது ஏன் என்றும் தெரியவில்லை என பெற்றோர், மக்கள் கூறுகின்றனர். மாணவர்களின் மாற்றுச்சான்றிதழை இஎம்ஐஎஸ்(நுஆஐளு) இணையத்தின் மூலமாகவே வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால் போதிய உள்கட்டமைப்பு, கணினி வசதி இல்லாத கிராமப்புற பள்ளிகள் பிரவுஸிங் சென்டருக்குப் படையெடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே ஏராளமான கணினிப் பயின்ற ஆசிரியர்கள் வேலை இல்லாது காணப்படும் நிலையில் பள்ளிக்கு ஒருவர் வீதம் அவர்களை ஏன் நியமனம் செய்யக் கூடாது என கல்வியாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.பள்ளியின் கடவு எண் மற்றும் பயன்பாட்டுக் குறியீட்டு எண்(ருளநச ஐனுஇ ஞயளளறழசன) இவைகளைத் தெரிந்து கொண்டால் எந்த பிரவுஸிங் சென்டரிலும் மாற்றுச்சான்றிதழை அவர்களே பிரிண்ட் அவுட் எடுத்து போலியாகத் தலைமை ஆசிரியரின் கையொப்பம் இட்டு மாற்றுச்சான்றிதழ் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர். இதனையும் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.