நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கடலி, குமாரமங்கலம் பகுதியில் மயிலாடுதுறை - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் (நல்லாடை ரோடு) பழுது பார்க்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. கப்பிகள் பெயர்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பணிகள் முடக்கப்பட்டு கிடப்பதால் அவ்வழியே கடந்து செல்லும் இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. உடனடியாக பழுது பார்க்கும் பணியை விரைந்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.