tamilnadu

img

வேளாங்கண்ணித் திருவிழா நிறைவு

நாகப்பட்டினம், செப்.8- ‘கீழை நாடுகளின் லூர்து’ எனப் போற்றப்படும் வேளாங்கண்ணிப் பேரா லய ஆண்டுப் பெருவிழா, செப்.8 ஆம்  தேதி மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. முன்னதாக 7-ல் அலங்காரத் தேர்ப் பவனி நடைபெற்றது. நாகை மாவட்டம் வேளாங் கண்ணிப் புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா, ஆகஸ்ட்-29, மாலை 6.30 மணிக்குக் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை பேராலயத்தில் பல்வேறு மொழிகளில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன. நடைப் பயணிகளாகவும் பேருந்துகள், ரயில்களிலும் பல்வேறு வாகனங்களிலும் இந்தப் பதினோரு நாட்களும் மதம், சாதி, இனம், மொழி கடந்து, பல கலாச்சாரங்களுடைய மக் கள் லட்சக்கணக்கில் வேளாங்கண்ணி க்கு வருகை தந்தனர். விழாவின் பிரசித்தி பெற்ற திருத் தேர்ப்(சப்பரம்) பவனி, சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்றது. பெரிய தேரில் மாதாவின் அலங்கார உருவம், அடுத்து ஆறு சிறிய தேர்களில் ஏசு நாதர், அந்தோணியார், செபஸ்தியார், உத்திரிய மாதா, மைக்கேல் சம்மனசு, சூசையப்பர் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டு, இந்த ஏழு தேர்களும் கடைத்தெரு, ஆரியநாட்டுத் தெரு, கடற்கரைச் சாலை வழியாக ஊர்வல மாக வந்து, பேராலய முகப்பு வாயிலை அடைந்தன. மேரி மாதா பிறந்த நாளா கிய செப்டம்பர்- 8, அன்று, மாலை, தஞ்சை மறை மாவட்டப் பேராயர் எம்.அம்புரோஸ் தலைமையில் கூட்டு வழிபாடு நடைபெற்றுப் பின்னர், மாலை-6 மணிக்குக் கொடி இறக்கப் பட்டு, வேளாங்கண்ணித் திருவிழா நிறைவு பெற்றது.