tamilnadu

img

கலைமகள் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

 தரங்கம்பாடி, ஜூலை 24-  நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா புதனன்று துவங்கியது. தமிழர்களின் வீர விளையாட்டுகள், பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளை கலைமகள் கல்வி நிறுவன இயக்குநர் என்.எஸ்.குடியரசு துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தேசிய கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் சுடர் ஏற்றப்பட்டு மாணவர்களின் பாரம்பரிய நடனங்களுடன் போட்டிகள் துவங்கின.