tamilnadu

img

வாக்கு இயந்திரப் பெட்டி குளறுபடியால் தேனியில் தாமதமான வாக்கு எண்ணிக்கை

தேனி:
தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு இயந்திரப் பெட்டிகளில் சீரியல் எண் மாறியது, பழுதடைந்தது  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

தேனியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் வியாழனன்று தபால் வாக்குகள்  எண ணிக்கை காலை 8:25 மணிக்கு காலதாமதமாக  துவங்கியது.கம்பம் சட்டசபைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேஜை நம்பர் ஒன்றில், வாக்குப் பெட்டி எண் சீரியல் எண், மாறியிருந்தது.இதனால் திமுக., காங்கிரஸ், அமமுக   கட்சியினர் வாக்கு எண்ணிக்கையை  வலியுறுத்தினர்.

பின்னர் 17- சி படிவத்தில் இருந்த எண்ணைஎழுதியிருந்தது கண்டறியப்பட்டு, அந்த இயந்திர எண்ணிக்கை நிறுத்தப்பட்டு வி.வி.பேட்., எண்ணும்போது எண்ண முடிவு செய்யப்பட்டு,  பிற மேஜை எண்ணிக்கை துவங்கியது.அதன்பின்னர், உசிலம்பட்டி தொகுதியில் 5-வது சுற்றில் 13-வது மேஜையில் வாக்குஇயந்திரம் பழுதானது. அதனால் எதிர்க்கட்சியினர் எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தினர். பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வி.வி.பேட்., எண்ணிக்கொள்ள தேர்தல் முகவர்களிடம் ஒப்புதல் பெற்றவுடன் எண்ணிக்கை தொடங்கியது.பெரியகுளம் தொகுதியில் 4-வது சுற்றில் 5 ஓட்டு பெட்டிகளில் “சீல்” இல்லாதது கண்டு, எண்ணிக்கை நிறுத்தப்பட்டுபின்னர் துவங்கியது.

உசிலம்பட்டி தொகுதியில் 4-வது சுற்றில் 64 எண் கொண்ட பாக்சில் 208 எண் கொண்ட (வேறு யூனியனை சேர்ந்த பெட்டி) இருந்தது.இதனால் எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தினர். இதனால் வேட்பாளர்கள் வரும் வரை பகல் 12  மணி முதல் 2:30 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு பின், அமமுக, வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் பேச்சுவார்தைக்குப் பிறகு, அந்த பெட்டி ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டு பின்னர் வாக்கு எண் ணிக்கை துவங்கியது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் அம்மாமக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் வாக்கு இயந்திரங்களில் வேறுபாடுகள் குறித்தும் தபால் வாக்குகள்  எண்ணப்பட்டு அதன் முடிவுகளை அறிவிக்கப்படாத குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்விடம் சென்று விளக்கம் கேட்டனர் .
ஈவிகேஎஸ்.இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில், வாக்கு எந்திரத்தின் எண்கள் வேறுபாடு குறித்து மாவட்டதேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்தேன். அதனை விரைவில் சரி செய்வதாககூறியுள்ளனர். மேலும் எந்தவொரு பிரச்சனையையும் கையில் இருக்க வேண்டாம் எனஇருக்கிறோம். எங்களை தூண்டும் பட்சத்தில் அதற்குரிய நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடுவோம் என்றார்.

தங்க.தமிழ்செல்வன் 
பத்திரிக்கையாளர் சந்திப்பில்  தங்க.தமிழ்ச்செல்வன்  கூறுகையில், மத்திய அளவில்பாஜக ஜெயிக்கிறது. மாநில அளவில் திமுகஜெயிக்கிறது. ஆனால் இந்த தேனி தொகுதியில் மட்டும் அதிமுக ஜெயிக்கிறது. இதற்கானகாரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும் ஏராளமான பணம் வைத்திருக்கும் பன்னீர்செல்வத்தின் மகன் மட்டுமே தேர்தலில்போட்டியிட முடியும் . சேவை செய்யும் நோக்கில்வந்த எங்களைப் போன்றவர்கள் இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடுவது கடினமாகத்தான் இருக்கும்.   தங்களது கட்சி முகவர்கள் ஒரு பூத்திருக்கு  12 பேர் இருக்கிறார் கள். ஆனால் அநேக இடங்களில் எங்களது வாக்கு எண்ணிக்கை பூஜ்ஜியம் காட்டுகிறது. தேர்தல் ஆணையம் ஒன்று இருக்கிறதா என சந்தேகம் எழுகிறது. இனி வருங்காலங்களில் தேர்தல் ஆணையத்தை மத்திய-மாநில அரசுகள் கையிலெடுத்து நடத்தப் போகிறது என்று தெரிவித்தார்.