தேனி
தேனி அருகே அன்னஞ்சியில் கொரோனா தடுப்பு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விளிம்புநிலை மாணவர்களின் குடும்பத்திற்கும் ,தூய்மை பணியாளர்களுக்கும் கள்ளர் மேல்நிலைப்பள்ளி சார்பில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டது .அன்னஞ்சி கள்ளர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் தலைமை வகித்தார்.
முதுகலை ஆசிரியர்கள் அன்பழகன் ,உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு அழைப்பாளர்களாக உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானதிருப்பதி, தேனி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியில் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களின் குடும்பத்திற்கு உணவு பொருட்கள் மற்றும் கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம், சானிடைசர் வழங்கப்பட்டது.