tamilnadu

img

விலை இல்லாததால் தக்காளியை சாலையில் கொட்டும் விவசாயிகள்

கடமலைக்குண்டு, மே 7- கடமலை-மயிலை ஒன்றி யத்தில் மயிலாடும்பாறை, வாலிப்பாறை, வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் ஏரா ளமான ஏக்கர் நிலப்பரப்ப ளவில் தக்காளி சாகுபடி நடை பெற்று வருகிறது. தக்காளி  உற்பத்தி அதிக அளவில் உள்ளது. உற்பத்தி அதிக ரிப்பின் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது தேனி, சின்னமனூர் உள்ளி ட்ட சந்தைகளில் தக்காளி கிலோ ரூ5 க்கும் குறை வாக விற்பனை ஆகி வருகி றது. இதனால் தக்காளி விவ சாயிகளுக்கு அதிக அள வில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விலை குறை ந்து கொண்டே வருவதால் விவசாயிகள் தக்காளியை பறித்து சாலைகளில் கொட்டி வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில் , தக்காளியை பறித்து சந்தைகளுக்கு அனுப்பி வைத்தால் வாகன போக்குவரத்து செல விற்கான தொகை கூட கிடை ப்பதில்லை. அதன் காரண மாக தக்காளிகளை பறித்து சாலையில் கொட்டி வருவ தாக தெரிவித்தனர். எனவே அரசு சார்பில் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றனர்.