டாக்கா,அக்.23- வங்கதேச நாட்லும் தேர்வில் ஆள்மாறாட்டம் நிகழ்ந்துள்ளது.வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தமன்னா நஸ்ரத் என்பவர் வங்கதேச திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.ஏ இளநிலை படிப்புக்கு தன்னைப் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நரசிங்கிடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக எழுத்துத்தேர்வில் அவருக்குப் பதிலாக வேறு ஒரு பெண் தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது.