தென்காசி, மே 27- தென்காசி மாவட்டம் பெத்தநாடார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், சிஐ டியு மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தின் கரி சலூர் கிளையின் சார்பாக சுயஉதவி குழுக்க ளில் நுண் நிதி நிறுவனங்கள் தமிழக அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி வட்டி வசூல் செய்வதை தடுத்து நிறுத்திடவும், 6 மா தம் கழித்து வசூல் செய்திட தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்திட வேண்டியும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கும் போ ராட்டம் கிளைத் தலைவர் ஆர்.சாந்தி தலை மையில் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் ராஜலெட்சுமி, கவிதா முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கணபதி, பீடி சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.வேல்முருகன், சிபிஎம் கீழப்பாவூர் ஒன்றியச் செயலாளர் எம்.தங்கம், பீடி சங்க ஒன்றியச் செயலாளர் ஆரியமுல்லை, சிபிஎம் பெத்தநாடார்பட்டி கிளைச் செயலாளர் குமார் மற்றும் சுயஉதவி குழுவில் உள்ள பீடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். கிராமங்களில் உள்ள பல சுயஉதவி குழுக்களில் தமிழக அரசு உத்தரவை மீறி கட்டாயப்படுத்தி கடன் வசூலில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் மீது தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி யும், கொரோனா காலத்தில் எவ்வித வருமான மும் இல்லாமல் உள்ள பீடி தொழிலாளர்களி டம் செப்டம்பர் மாதத்திற்கு பின்பு வசூல் செய்திட கோரியும் கோரிக்கை மனு கொடுத்த னர்.