தென்காசி, மார்ச் 1- முதல்வர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண் மையில் நடைபெற்றன. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில், ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி அபிநயா, 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் வென்றார். இதை யடுத்து அவர் மாநில அளவிலான போட்டி க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவிக் கும், உடற்கல்வி ஆசிரியர்கள் சுபா, சுடலைக்கனி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.