தூத்துக்குடி, ஜூன் 9- திருச்செந்தூர் அருகே முகநூலில் பெண்கள் குறித்து அவதூறாக பதி விட்ட வாலிபர் கைது செய்யப் பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வர் சங்கரநயினார் மகன் மணி கண்டன்(32) டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித் துள்ளார். இவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றியும், சமுதாய பெண்க ளைப் பற்றியும் அவதூறாக சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேஸ்புக்கில் கடந்த 5ம் தேதி பதி விட்டுள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பே ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் கேரளா வில் இருந்து திருச்செந்தூ ருக்கு லாரியில் மணிகண்டன் வருவதாக போலீசாருக்கு ரக சிய தகவல் கிடைத்தது. குல சேகரப்பட்டினம் சந்திப்பு பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மணிகண் டனை கைது செய்தனர். அவ ரிடம் நடத்திய விசார ணையில் குருவாயூரில் உள்ள ஓட்டலில் கடந்த 4 மாதங்களாக மணிகண்டன் வேலை பார்த்துள்ளார். அப்போது மது போதையில் இருந்தபோது பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டது தெரிய வந்தது. அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரி வித்து சிலர் அவரை தாக்கி யதால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு நாட்டு வைத்தியரி டம் கட்டு போட்டதாக போலீ சாரிடம் தெரிவித்துள்ளார்.