ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி, அக்.19- ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் சட்ட விரோதமாக செயல் பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர் முத்து அமுத நாதன் கூறினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப் பாக்கிச் சூடு தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தில் சனிக்கிழமை நடந்த விசாரணையில் அகில இந் திய வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர் முத்து அமுதநாதன் ஆஜரானார். விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு முத்துஅமுதநாதன் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், தூத்துக்குடி யில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக் கள் மீது கண்மூடித்தனமாக துப் பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அது சம்பந்தமாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்மை கண்டறியும் குழு மூலம், துப்பாக்கிச்சூடு மற்றும் காவல் துறை தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் விசாரித்து, துப் பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்தோம்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரணை நடைபெற வேண்டும் என வழக்குத் தாக்கல் செய்தோம். அதன் அடிப்படையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வரு கிறது. அதன்படி சனிக்கிழமை நடை பெற்ற விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்க, சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்ட காவல்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என நீதித்துறை ஆணை யத்தின் முன்பு அறிக்கை கொடுத் துள்ளோம் என்றார். பேட்டியின்போது அகில இந் திய வழக்கறிஞர்கள் சங்க தூத் துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ரங்க ராஜன் உடனிருந்தார்.