tamilnadu

img

சாலையை செப்பனியிட கோரி நகராட்சி ஆணையரிடம் மனு

தூத்துக்குடி, அக்.6- வள்ளுவர் நகர் புதுகிராமம் பகுதி யில் சாலையை செப்பனியிட்டு தார் சாலை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. பின்னர் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி நகராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் புதுகிராமம் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக இரண்டாம் பைப்லைன் திட்டத்திற்காக தோண்டப் பட்ட சாலை இன்னும் சரி செய்து தார் சாலை அமைக்காமல் இருக்கிறது. இத னால் முதியோர் ,குழந்தைகள், பெண் கள் உட்பட அனைவரும் சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள் ளது. இது பிரதான சாலையாக உள்ள தால் போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரம மாக உள்ளது. அவசர கால சிகிச்சைக் காக வாகனங்களில் செல்வதற்கும் அவசரகால வாகனங்கள் வந்து சேர வும் மிக சிரமமாக உள்ளது. எனவே உட னடியாக வள்ளுவர் நகர் புதுக்கிராமம் பகுதியில் சாலை அமைத்து சாலை வசதி செய்து தரும் படி கூறியுள்ளனர். இதில் சிபிஎம் புதுக்கிராமம் கிளைச் செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். வள்ளுவர் நகர் கிளை செய லாளர் சுப்பிரமணியன் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமா சங்கர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரு கன், ஆட்டோ சங்க நிர்வாகி ஜெயபால் சிபிஎம் மூத்த தோழர் ராமசுப்பு உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.