தூத்துக்குடி, மே 28- சென்னையில் இருந்து எட்டய புரம் வந்த மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டது. இதனால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. சென்னை புளியந்தோப்பு பகுதி யைச் சேர்ந்த 23 வயதான பெண் ணுக்கும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெரிய தெருவைச் சேர்ந்த 26 வயதான வாலிபருக்கும் வருகிற 7-ந்தேதி எட்டயபுரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது. இதற்காக மணப்பெண் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேர் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப் பட்டு வந்தனர். அவர்கள், தூத்துக் குடி மாவட்ட எல்லையான எட்டய புரம் அருகே மேலக்கரந்தை சோத னைச்சாவடியில் வந்தபோது, மணப்பெண் உள்ளிட்ட 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத் தப்பட்டது.
பின்னர் அவர்கள் 5 பேரையும் எட்டயபுரம் இல்லத்து பிள்ளைமார் தெருவில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டில் தனிமைப்படுத்தினர். இதற்கிடையே, மணப்பெண் ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், மணப்பெண்ணின் குடும்பத்தினரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தினர். இதையடுத்து வருகிற 7-ந்தேதி நடைபெற இருந்த திருமணத்தை தள்ளி வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.