தூத்துக்குடி,அக்.23- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைத்துறையின் மூலம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (சத்துமிகு சிறுதானியங்கள்) திட்ட விளக்க பிரச்சார ஊர்தி துவக்க விழா செவ்வாயன்று நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (சத்துமிகு சிறுதானியங்கள்) திட்ட விளக்க பிரச்சார ஊர்தியினை, கொடி யசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சி யர் (வருவாய்) விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:- மத்திய அரசு 10.4.2018 முதல் சோளம், கம்பு, ராகி, திணை, வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, கோட்டு (மரகோ துமை) மற்றும் ராஜ்கிரா (விதை கீரை) போன்ற சத்துமிக்க தானியங்களை“சத்துமிகு சிறுதானியங்கள்” என அறி வித்துள்ளது. சத்துமிகு சிறுதானியங்கள் நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கவையாக விளங்குகிறது. மேலும், சிறுதானியங்கள் சர்க்கரை நோய் எதிர்ப்பு தன்மையுடையது. தூத்துக்குடி மாவட்டம் 82 சதவீதம் மானாவாரி சாகுபடி செய்யும் மாவட்டமாகும், இங்கு மானாவாரி வேளாண்மை மற்றும் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் தானியங்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. மேலும், நமது மாவட்டத்தில் பொதுவாக சோளம் 11100 எக்டர், கம்பு 10200 எக்டர் மற்றும் குதிரைவரலி 200 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. நமது மாவட்டத்தில் உள்ள விவசாயி களுக்கு சத்துமிகு சிறுதானியங்களின் சாகுபடி தொழில் நுட்பம் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண்மைத் துறையின் மூலம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (சத்து மிகு சிறுதானியங்கள்) திட்ட விளக்க பிரச்சார ஊர்திகள் துவக்கி வைக்கப்பட்டது என்றார்.