tamilnadu

img

தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்த 45 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம்...

தூத்துக்குடி:
சம்பா பருவம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளின் உரத் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்யும் வகையில், மத்திய அரசிடம் இருந்து உரஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்துஐபிஎல் என்ற நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 45,161 மெட்ரிக்டன் யூரியா உரத்துடன் கப்பல்ஒன்று தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேர்ந்துள்ளது.இதில் தமிழகத்துக்கு 35,561 மெட்ரிக் டன் யூரியாஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உள் ஒதுக்கீடுகிடைக்கப் பெற்றுள்ளது.யூரியா உரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், தனியார் உரக்கடைகள் மூலமாகவும் தங்குதடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒரு கப்பலில் யூரியா உரம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வர உள்ளது என தூத்துக்குடிமாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஐ.முகைதீன் தெரிவித்துள்ளார்.