tamilnadu

img

நான்காம் ஆண்டில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு

திருவனந்தபுரம், ஜுன் 11- மூன்றாண்டுகளுக்கு முன்பு கேரள சட்டமன்ற தேர்தலையொட்டி அன்றைய ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அரசை அம்பலப்படுத்தி இடது ஜனநாயக முன்னணி  வெளியிட்ட விளம்பர வாசகம் ‘எல்டிஎப் வந்தால் எல்லாம் சரியாவும்’. ஆம் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள எல்டிஎப் அரசு முந்தைய அவல நிலைகளை போக்கியுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமல்ல எதிர்பாராத இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாத்து புதிய கேரளத்தை வடி வமைத்துக் கொண்டிருக்கிறது எல்டிஎப் அரசு. அரசு நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகளை 176 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக தயாரித்து புராக்ரஸ் ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது.  திங்களன்று (ஜுன் 10) மாலை திருவனந்த புரம் நிசாகந்தி கலையரங்கில் நடந்த விழாவில் எல்டிஎப் அரசின் மூன்றாண்டு புராக்ரஸ் ரிப்போர்ட்டை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். வருவாய்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் தலைமையில் நடந்த  இந்த விழாவில் திருவனந்தபுரம் மேயர் வி.கே. பிரசாத், அமைச்சர்கள் ராமச்சந்திரன் கடனப் பள்ளி, கே.கிருஷ்ணன்குட்டி, ஏ.இ.கே.சசீந்திரன், இ.பி.ஜெயராஜன் உள்ளிட்ட அமைச் சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற னர். தலைமைச் செயலாளர் டோம்ஜோஸ் நன்றி கூறினார்.     கேரளத்தின் முன்னேற்றத்திலும் வளர்ச்சி யிலும் கவனம் செலுத்தி வரும் எல்டிஎப் அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளது அதன் அடிப் படையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மக்க ளுக்கு விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

எல்டிஎப் வெளியிட்ட தேர்தல்  அறிக்கையில் கூறப்பட்ட 600 வாக்குறுதிகளில் ஒவ்வொன்றி லும் ஏற்பட்டுள்ள  முன்னேற்றங்கள் விளக்கப் பட்டுள்ளன. ஆட்சி அதிகாரத்துக்கு  வருவதற்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை எந்த அளவுக்கு இந்த அரசு நிறைவேற்றியுள்ளது என்பதை மக்கள் சீர்தூக்கிப்பார்ப்பதற்கான வாய்ப்பாக இந்த அறிக்கை உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் இல்லாத பல திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை இந்த அறிக்கையின் இணைப்பாக தரப்பட்டுள்ளன.  இந்தியாவிலேயே ஆண்டுதோறும் புராக்ரஸ் ரிப்போர்ட் வெளியிடுவது கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு மட்டுமேயாகும். மதச்சார்பின்மையை கடைப்பிடிப்பதோடு ஊழல் கறைபடியாத அரசாகவும் கேரளத்தின் பெருமையை பறைசாற்றுவதாகவும் எல்டிஎப் அரசு உள்ளது. அறிக்கையின் பகுதிகளாக  அரசு மேற்கொண்ட கொள்கை முடிவுகள், பெரு வெள்ள பாதிப்புகளை எதிர்கொண்ட விதம் - புனரமைப்பு பணிகள், உலக புனரமைப்பு மாநாட்டில் முதல்வரின் உரை, வளர்ச்சியில் கிஸ்பியின் பங்கு, இதர செயல்பாடுகள் குறித்தான விவரங்களுடன் அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

தேர்தல் அறிக்கையும் கல்வித்துறை மாற்றமும்
கல்வித்துறை குறித்து எல்டிஎப் தனது தேர்தல் அறிக்கையில் ‘ஒவ்வொரு பள்ளிக்கூட மும் சிறந்த கல்வி மையமாக மாற தேவையான உடனடி – நீண்டகால திட்டங்கள் உருவாக்கப் படும்’ என கூறப்பட்டிருந்தது.  அதன் மீது எல்டிஎப் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளாக புராக்ரஸ் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுக்கல்வி பாது காப்பு கொள்கை அறிவிக்கப்பட்டு பொதுப் பள்ளிகள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டு வருகின்றன. அதற்கான மாஸ்டர் பிளான் உரு வாக்கப்பட்டுள்ளது. 4752 பள்ளிகளில் 45. 000 வகுப்பறைகள் ஹை டெக்காக மாற்றப் பட்டுள்ளன. 14 ஆயிரம் பள்ளிகளுக்கு இணையத்  தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் 141 பள்ளிகளுக்கும்  தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் 395 பள்ளிகளுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 444 பள்ளி களுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன.  இதுபோல் தேர்தல் அறிக்கையின்படி கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட வேறு பல திட்டங்களும்  இதர துறைகளில் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளும் புராக்ரஸ் ரிப்போர்ட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.