tamilnadu

img

சமூக முடக்கத்தின் துயர் துடைத்திட ஒரு பொருளாதார செயல்திட்டம்

அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் சிபிஎம் கடிதம்

புதுதில்லி, மே 4- சமூக முடக்கத்தின் துயர் துடைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பொருளாதார செயல் திட்டத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இது குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை யும் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சி கோரியிருப்பதாவது:

கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் விளைவாக அறிவிக்கப் பட்டுள்ள தேசிய அளவிலான சமூக முடக்கம் ஆகிய வற்றின் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் எழுந்துள்ள அவசரப் பிரச்சனைகளைச் சமாளித்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நட வடிக்கைகள் குறித்தும் ஒரு பொருளாதார செயல் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாரித்து வெளியிட்டிருக்கிறது.  

இப்போது, தேசிய சமூக முடக்கம் மூன்றாவது முறையாக இரு வாரங்களுக்கு நீட்டிக்கப் பட்டிருக்கி றது. இது மக்களின் பிரச்சனைகளையும் அவர்களின் வேதனைகளையும் ஆழமான முறையில் மேலும் அதிகப்படுத்திடும்.   இத்தகு நிலைமையில் மக்களின் துயர் துடைத்திட, ஒரு பொருளாதார செயல்திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தயாரித்து அதனை குடியரசுத் தலை வருக்கும் பிரதமருக்கும் அவர்களின் ஆலோசனை களுக்காக அனுப்பி வைத்திருக்கிறது.

இது தொடர்பாக தாங்களும் உங்கள் கட்சியின் சார்பில் தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.   அதனைத் தொடர்ந்து கூட்டாக ஒரு செயல்திட்டத்தை அறிவித்திட லாமா என்பது குறித்தும் உங்கள் முன்மொழிவு ஏதே னும் இருப்பின் அதனையும் அனுப்பிவைக்கக் கோரு கிறோம். நீங்கள் ஒப்புக்கொண்டால், இது தொடர்பாக காணொலி மூலம் கலந்தாலோசனைகள் நடத்திடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இது தொடர்பான விவ ரங்கள், தேதி மற்றும் நேரம் பின்னர் நிச்சயித்துக் கொள்ள முடியும். இவ்வாறு கட்சியின் சார்பில் அனைத்து எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

                                           (ந.நி.)