பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்காவிடில் போராட்டம் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ அறிக்கை
மன்னார்குடி அக்.31- விரைவில் பயிர் இன்சூரன்ஸ் தொகையை விவசாயிகளுக்கு பெற்று தரவேண்டும். இல்லையெனில் வீதியில் இறங்கி போராடும் நிலை உருவாகும் என எம்எல்ஏ டிஆர்பி ராஜா கூறியுள்ளார். இது பற்றி அவர் செய்தியாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையின் சாராம்சம் வருமாறு. பயிர்க் காப்பீடு செலுத்திய நமது விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெறவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து சென்னை அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட் தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று மண்டல மேலாளரை சந்தித் தேன். அப்பொழுது கடந்த வெள்ளி அன்று தான் அரசிடமிருந்து புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெற்றன எனவும் அரசு வழங்கியுள்ள கணக்குக ளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கள அதிகாரிகள் எடுத்த புள்ளி விவரங்களுக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் தொடர்ந்து களத்தில் மாதிரிகள் எடுக்கப்படாமல் சில நேரங்களில் அலுவலகத்தில் இருந்தபடியே கணக்குகள் எடுக்கப்படுவதால் தான் இதுபோன்ற சில தவறுகள் நடைபெறு கின்றன என நமது விவசாயிகள் சிலர் சந்தேகிக்கின்றனர். எனவே இந்த பிரச்சனைக்கு விரைந்து தீர்வுகண்டு விடுபட்ட பகுதிகளுக்கு உடனடியாக இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட வேண்டுமென்று வலி யுறுத்தப்பட்டது. அக்டோபர் 31 தில்லியில் மத்திய விவசாய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் உடனான கூட்டம் நடைபெற இருக்கிறது என்றும், கூட்டத்தில் இன்சூரன்ஸ் தொகை விடுபட்டது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு விரைவில் வழங்குவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்திருக்கிறார்கள். அரசுக்கும், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடைபெறும் குழப்பங்களால் இயற்கை பேரிடர்களால் பாதிப்படைந்துள்ள விவசாயி களுக்கு தீபாவளி பண்டிகைக்காவது இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வில்லை. தற்போது அவர்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை கிடைத் தால் தான் மன நிம்மதி அடைவார்கள். எனவே அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்தி விரைவில் பயிர் இன்சூரன்ஸ் தொகையை விவசாயி களுக்கு பெற்று தர வேண்டும். இல்லையெனில் வீதியில் நின்று போராடு வதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு டி.ஆர்.பி.ராஜாகுறிப்பிட்டுள்ளார்.
நவ.4-ல் கோட்டூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
மன்னார்குடி,அக்.31- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் திருவாரூர் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருவாருர் மாவட்டம் கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் உரு வாக்கத்தில், தேசிய அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்றக் குழுமத்தின் உதவியோடு தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆகும். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் நோக்கத்துடனும், பள்ளி பருவத்திலேயே ஆய்வு திறனை வளர்க்கும் விதத்தில் ஒரு குழுவில் இரண்டு மாண வர்கள் ஒரு வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் தங்கள் பகுதிகளி லுள்ள சமூகம் சார்ந்த பிரச்சனைகளை களத்தில் மூன்று மாத காலம் ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை சொல்வதே தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் நோக்கமாகும். இந்த ஆண்டிற்கான கருப்பொருளான “துாய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்திற்கான அறிவியல் தொ ழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் நமது மாவட்டத்தில் 50 பள்ளிகளிலிருந்து 100 ஆய்வறிக்கைகள் பங்கேற்கும் திருவாரூர் மாவட்ட அளவிலான மாநாடு எதிர்வரும் நவம்பர் 4 ஆம் தேதி கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் தயாரித்துள்ள பள்ளிகள் உடனே ஆன்லைன் மூலம் பதிவு செய்து, ஆய்வறிக்கைகளை மாநாட்டில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மாநாடு தொடர்பாக மாவட்டத் தலைவர் தை.புகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வா.சுரேஷ் முறையே கைப் பேசி எண்கள் 84897 06165 மற்றும் 98655 93067 என்ற எண்க ளிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை கேட்டறியலாம். இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலா ளர் யு.எஸ்.பொன்முடி தெரிவித்துள்ளார்.