தோழர் கே.பிரேமா நினைவு தினம்
திருவாரூர், ஆக.6- திருவாரூர் அருகே உள்ள மணக்கால் கிளை சிபிஎம் முன்னாள் செயலாளர் கே.கலைமணியின் துணைவியா ரும், கட்சி உறுப்பினராக பணியாற்றி மறைந்தவருமான கே. பிரேமா நினைவு தினம் மணக்காலில் கடைப்பிடிக்கப் பட்டது. இதனையொட்டி என்.எஸ்.திருஞானம்(வாலிபர் சங்கம்) தலைமையில் கொடியேற்றப்பட்டது. முன்னாள் கிளைச் செயலாளர் ஆர்.லெட்சுமிராஜ் கொடியேற்றினார். மூத்த உறுப்பினர் என்.கோவிந்தராஜன் மாலை அணி வித்தார். கிளைச் செயலாளர் கே.பெரியசாமி, ஆர்.செல்வ ராஜ்(சிஐடியு), எஸ்.மணி, டி.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற கோவில் பணியாளர் சங்கக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக.6- தமிழ்நாடு திருக்கோவில் ஓய்வுபெற்ற பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாநில சிறப்பு தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கம் திருக்கோவில் பணியாளர் சங்க துணைத்தலைவர் சீனிவாசரெங்கன், கிளைத்தலைவர் அய்யாசாமி ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சந்திர சேகரன் ஆண்டறிக்கை மற்றும் வரவு– செலவு அறிக்கை யை சமர்ப்பித்தார். மாநில தலைவர் சொக்கலிங்கம், முது நிலை திருக்கோவில் பணியாளர் சங்க துணை செயலாளர் சுதர்சனம், ஸ்ரீரங்கம் திருக்கோவில் பணியாளர் சங்க தலைவர் பழனிச்சாமி, பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கூட்டத்தில், கடந்த 14.12.2015-க்கு முன் இறந்த வர்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் காலதாமதம் செய்யாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரியண்ணன் நன்றி கூறினார்.