tamilnadu

நிவாரண உதவிகளில் ரேஷன் அரிசி? கார்டுதாரர்களுக்கு அளவு குறைப்பு

திருவாரூர், மே 26- கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் பேரி டர் காலத்தை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் பல நிவாரண உதவிகளை அறிவித்தன. அவை போது மனதாக இல்லையென்றா லும் அப்படி அறிவிக்கப்படு பவை முறையாக மக்களுக்கு சென்று சேர்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  குறிப்பாக தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் இவை மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுகிறது. அத்தி யாவசிய பொருட்கள் இந்த நான்கு மட்டும் தான் என்று கூறினால் அது அறியாமை ஆகும். மண்ணெண்னெய் அளவு வெகுவாக குறைக் கப்பட்டது.  

அரிசி அளவு குறைப்பு
இரண்டு நபர் உள்ள குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்குவது 16 கிலோ அரிசி. குடும்ப அட்டையின் ஒரு நுகர்வோர் தனது பகுதி யைச் சேர்ந்த ரேஷன் கடைக்கு செவ்வாய்க் கிழமை பொருட்களை வாங்க சென்றுள்ளார். அவ ருக்கு 22 கிலோ அரிசியும் தலா ஓரு கிலோ சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த மார்ச் மாத ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் அந்த பொருட்களை சேர்த்து வாங்கிக்கொள்ளலாம் என தமிழக முதல்வர் அறி வித்திருந்தார். ஆனால் ரேஷன் கடை யில் ஒதுக்கீடு வரவில்லை. எனவே தர இயலாது என பணியாளர் கூறிவிட்டார். இது போன்ற பல நுகர்வோருக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை.

இந்த குளறுபடி ஒருபுறம் இருக்கட்டும்.  ஏப்ரல் மாதம் முதல் 5 கிலோ அரிசி வழக்கமான அளவோடு சேர்த்து கூடுத லாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தி ருந்தார். அந்த அறிவிப்பின் படியும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவிப்பின்படியும் ஏப்ரல் தொடங்கி ஜூன் மாதம் வரை மூன்று மாதங்க ளுக்கு மத்திய, மாநில அரசு களின் சார்பில் 30 கிலோ அரிசி கூடுதலாக கிடைக்க வேண்டும்.  ஆனால் இரண்டு நபர் குடும்பத்திற்கு செவ் வாய்க்கிழமை ரேஷன் கடைக்கு சென்ற மேற்கண்ட நுகர்வோருக்கு 26 கிலோ அரிசிக்கு பதிலாக 22 கிலோ மட்டுமே வழங்கப்பட்டது. இதில் 4 கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வழங்கக்கூடிய 16 கிலோ அரிசியை 12 கிலோ வாக குறைத்து 22 கிலோ வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கிய அரிசியின் அளவைக் குறைத்து மத்திய அரசு வழங்கிய அரிசியை இணைத்து ஒரு “அரிசியல் விளையாட்டு” விளையாடப்பட்டுள்ளது. வரும் மாதங்களிலும் இதே நிலை தொடரும்.

அமைச்சர் மறுப்பு
அரிசி அளவு குறைப்பு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானவுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் அரிசியின் அளவு குறைக் கப்படவே இல்லை, எப்போ தும் போலவே வழங்கப்படு கிறது என கூறினார். இங்கு வேறு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். பல் வேறு இடங்களில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு பல அரசி யல்வாதிகளால் வழங்கப்படு கிற நிவாரண உதவிகளில் ரேஷன் அரிசியும் உள்ளதாக புகார்கள் உள்ளன. மக்களுக்கு முறையாக முழுமையான நிவாரணம் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா தமிழக அரசு.           -(ந.நி)