மறைந்த இலக்கிய பேராசான் ப.ஜீவானந்தம் 114-வது பிறந்த நாள் நிகழ்ச்சி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் எதிரில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.