tamilnadu

அரசு ஊழியர்கள் சந்திப்பு இயக்கம்

திருவாரூர், ஜூலை 13- திருவாரூர் மாவட்டத்தில் மூன்று  தினங்களாக தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜமாணிக்கம், செயலாளர் வெ.சோமசுந்தரம், பொ ருளாளர் சி.பிரகாஷ், துணைத்த லைவர் ஏ.தனபால், மாவட்ட இணை செயலாளர் எஸ்.சுதாகர் ஆகியோர் ஒரு குழுவாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் துறைவாரி அலுவ லகங்களில் பணியாற்றும் இரு பால் ஊழியர்களை சந்தித்து கோரி க்கைகளை விளக்கி உரையாற்றி னர். மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஆர்ச னிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோ பதி மாத்திரை வழங்கப்பட்டது.  கொரோனா தடுப்பு பணி யில் ஈடுபட்டு உயிரிழக்கும் அரசு  ஊழியர்களுக்கு அரசு அறிவித்த  அடிப்படையில் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பாதுகாப்பு உபக ரணங்களை வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை விளக்கி இந்த இயக்கம் நடைபெற்றது.  திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடா மங்கலம், வலங்கைமான், குடவா சல், நன்னிலம் ஆகிய வட்டங்களில் இந்த இயக்கம் நடைபெற்றது.