tamilnadu

செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் ஐந்து நாட்கள் ரத்து

மன்னார்குடி, ஆக.16- மன்னார்குடி- கோயம்புத்தூர் விரைவு ரயில் வண்டி எண் 16615 மற்றும் கோயம்புத்தூர் மன்னார்குடி விரைவு ரயில் வண்டி எண் 16616 இரண்டு சேவைகளும் வரும் 17-ம் தேதியிலிருந்து 21-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.  ஈரோடு சந்திப்பில் இரண்டு புதிய ரயில் தடங்கள் போடப்பட்டு வருகின்றன. இத்தடங்களின் சமிக்ஞை இணைப்புகள் மாற்றப்பட்டு மீண்டும் கொடுக்கப்படுவதால் இந்த தற்காலிக முடிவை திருச்சி கோட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. அதே போல் ஜோத்பூர் செல்லும் வாராந்திர பகல் கீ கோத்தி விரைவு ரயில் மன்னார்குடியிலிருந்து பிரதி திங்கள் கிழமை புறப்படுகிறது. இவ்வண்டி வரும் 19-ம் தேதி ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல் 24-ம் தேதி ஜோத்பூரிலிருந்து மன்னார்குடிக்கு இந்த ரயில் வண்டி வராது. ஜெய்ப்பூர் சந்திப்பில் இது போன்ற ரயில் தட வேலைகள் நடைபெறுவதால் இந்த தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது என திருச்சி கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.