tamilnadu

ஆக.9 முதல் 18 வரை மன்னார்குடியில் புத்தகத் திருவிழா

மன்னார்குடி ஆக 6- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா 9-ம் தேதியிலிருந்து 18-வரை நடைபெறவிருக்கி றது. இது பற்றி ஒருங்கிணைப்பாளர் இரா. இயேசுதாஸ் தெரிவித்ததாவது: வரும் ஆகஸ்ட் 9 முதல் 18 வரை 10 நாட்கள் மன்னார்குடி ஏகேஎஸ் மகாலில் புத்தக திருவிழா 2019 நடைபெற விருக்கிறது. தமிழ்நாட்டின் 40 முக்கிய பதிப்பகத்தார் புத்தக திருவிழாவில் புத்தக அரங்குகளை காட்சிக்கு வைக்கவிருக்கிறார்கள். சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் திருவாரூர் மற்றும் அருகாமையில் இருக்கும் மாவட்டங்களிலி ருந்து வருவார்கள் என எதிர்பார்க்கிறறோம். அதைத் தவிர பொது மக்கள் சுமார் 76 ஆயிரம் பேர் புத்தக திருவிழாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். ரூ.7 லட்சம் அளவிற்கு மாணவர்களுக்கு முன் பதிவு டிக்கெட்டுகள் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் புத்தகத் திருவிழாவை துவக்கி வைக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை புத்தக விற்பனையை துவக்கி வைக்கிறார். தினசரி மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை அரங்க வாயிலில் அமைக்கப்பட விருக்கும் பொதுமேடையில் பொது பங்கேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். முதல் நாள் அன்று மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தமிழ் பல்கலைக்கழக துறைத் தலைவர் முனைவர் இரா.காமராசு பங்கேற்கிறார்கள். 10-ல் பத்திரிகையாளர் சமஸ், 11-ல் இந்திய ஆட்சிப்பணி த.உதயசந்திரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். 12-ல் திங்கட்கிழமை குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் உரையாற்றுகிறார். 13-ல் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, 14-ல் முன்னாள் ஐ.பி.எஸ்.ஏ. கலியமூர்த்தி, 15-ல் பத்திரிகையாளர் மதுக்கூர் ராமலிங்கம், 16-ல் திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன், 17-ல் ஊடகவியலாளர் கார்த்திகேயன், அக்குஹீலர் உமர்பாருக் ஆகியோர் பங்கேற்கிறார்கள். தினமும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன. இதைத் தவிர குழந்தைகளுக்கான மந்திரமா தந்திரமா போன்ற புதிர்களுக்கான விடையைக் கூறும் எளிய முறை அறிவியல் சோதனை சிறுவர்களுக்கான கதை கூறுதல் போன்ற நிகழ்ச்சிகள் அருகாமையில் உள்ள சாய்கிருஷ்ணா மண்டபத்தில் நடைபெறும். பள்ளி வேலை நாட்களில் காலை 10 மணிக்கு துவங்கி 1 மணி வரையிலும் பிற்பகல் 2 மணிக்கு துவங்கி 4 மணி வரை மாணவர்களுக்கும் இதர விடுமுறை நாட்களில் காலை 10 மணி யிலிருந்து 1 மணி வரை 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.  புத்தக திருவிழா நடைபெறும் நாட்களில் தமிழக உணவுத்துறை அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். பொது மக்கள் முன்கூட்டியே புத்தக டிக்கெட்டுகள் வாங்கி சலுகை விலையில் புத்தகங்களை பெற்று பயன் பெறலாம். புத்தக திருவிழா புத்தக கண்காட்சி மட்டுமின்றி பல்வேறு சிந்த னைசார் உரைவீச்சுகள் கலை நிகழ்ச்சிகள் விவாதங்கள் நடைபெறவிருக்கின்றன. மாவட்டம் முழுவதும் பேசப்படும் விழாவாக இது அமையும். இவ்வாறு இரா.யேசுதாஸ் கூறி னார்.