திருவாரூர், ஜூலை 1- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளை ஆவின் முகவர்களாக நியமிக்கப்பட்டனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவ ட்டங்களை உள்ளடங்கி தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் செய ல்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 7,000 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. மாவட்டத்தில் பால் விற்பனையை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க ப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், திருவாரூர் மாவட்ட த்தில் கடந்த 2019-2020ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளி களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் 5 நபர்களை ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் உப பொ ருட்கள் விற்பனை செய்யும் முகவர்களாக நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.