குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் மீஞ்சூர் பஜாரில் “நிறம் மாறும் தேசம்’’ என்ற தலைப்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதற்கு ஒருங்கிணைப்பு கமிட்டியின் மாவட்டத் தலைவர் எம்.சீனிஹாத்திம்கனி தலைமை தாங்கினார். இதில் வணிகர் சங்கத்தின் பேரவை மாவட்டச் செயலாளர் டி.சேக்அகமது வரவேற்றார் முன்னாள் அமைச்சர் ஏ.ரகுமான்கான், கே.ஏ.எம் முஹம்மது அபுபக்கர் எம்எல்ஏ, குராசானி பள்ளிவாசல் தலைமை இமாம் டாக்டர் எம்.சதீதுத்தீன் பாகவி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செ.சி.சுந்தரவல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன் உட்பட பலர் பேசினர்.