கருத்து கேட்பு கூட்டம்
திருவண்ணாமலை, நவ.7- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, செங்குணம் கிராமத்தில் கிரானைட் வெட்டி எடுப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெற்றது. போளூர் குன்னத்தூர் கூட்ரோடு, எஸ்எம்எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு. கந்தசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். பின் னர் பொதுமக்களிடமிருந்து மனுக் களையும் பெற்றுக் கொண்டார். இதில், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்க ளின் கருத்துக்களை தெரிவித்த னர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் செங்குணம் கிரா மத்தில் சுமார் 23 ஹெக்டேர் பரப்பள வுள்ள அரசு புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு சொந்தமான கிரானைட் குவாரிக்கு சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
தேவனாம்பட்டினத்தில் மாணவி உள்பட 4 பேருக்கு டெங்கு
கடலூர், நவ.7- கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பில் சுமார் 650 மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இப்பகுதியைச் சேர்ந்த பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் காய்ச்சல் அதிகரித்து மேலும் பலர் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ராஜேஷ் மகள் ரஞ்சிகா (5), முரளி மகள் ரஷ்யா (5), ராஜா மகன் சபரி (7), எழிலன் மகள் கல்லூரி மாணவி கார்த்திகா (18) ஆகியோ ருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டனர். சுனாமி குடியிருப்பில் ஒரே தெருவை சேர்ந்த 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் வாய்க்கால்களை சரிசெய்து பிளீச்சிங் பவுடர் தெளித்து கொசு மருந்து அடித்தனர். சுனாமி குடியிருப்பில் வடிகால் குழாய்களின் வழியே கழிவுநீர், கிணறு வடிவிலான தொட்டியில் சுத்திகரிக்கப் பட்டு மோட்டார் மூலம் அருகிலுள்ள உப்பனாற்றில் திறந்து விடப்படும். ஆனால் சமீபகாலமாக சுத்திகரிப்பு தொட்டி செயல்படுவதில்லை மோட்டார் பழுதடைந்து பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறாததால் தெருக்களில் கழிவு நீர் வழிவதோடு, குப்பைக் கூளங்கள் குவிந்தும் சுகாதார சீர்கேடாய் காணப்படுவதாக அப்பகுதியினர் தெரி வித்துள்ளனர்.