திருவண்ணாமலை, டிச.11- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் விவசாயிகளின் குடிசை மற்றும் சாகுபடி பொருட்களை, வனத்துறையினர் தீவைத்து எரித்ததால் விவசாயி குடும்பம் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வீரப்ப னூர், அரசவள்ளி, பர்கூர், எட்டிமரத்தூர், புதுப்பட்டு பகுதிகளில் பல்லாயிரக்க ணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக இவர் கள் வனத்தையொட்டி விவசாயம், தேன் உற்பத்தி, வன பொருட்களை சேகரிப்பு என்ற தொழில்களில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் குடிசையை வனத்துறை யினர் தீயிட்டு எரித்துள்ளனர். அவரின் சாகுபடி பொருட்களையும் சேதப்படுத்தி யுள்ளனர். இதனால் அந்த விவசாயி குடும் பம் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். ஜவ்வாது மலையில், முள்ளிப்பட்டு கிரா மத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் கோவிந்த சாமி. இவருக்கு ஒரு மனைவியும், புவ னேஷ்(9), யோகேஷ்(6) ஆகிய இரு குழந்தை கள் உள்ளனர். குழந்தைகள் முள்ளிப்பட்டு அரசு ஆரம்பப் பள்ளியில் படித்து வருகின்ற னர். கோவிந்தசாமி தனது குடும்பத்தாருடன், தான் நீண்டகாலம் அனுபவித்து வரும், வன நிலத்தில் குடிசை கட்டி வசித்து வருகிறார். மரவள்ளி, தக்காளி, மக்காச்சோளம், கொள்ளு ஆகிய பயிர்களை தனது நிலத்தில் வழக்கமாக சாகுபடி செய்து வருகிறார். தான் குடியிருக்கும் குடிசைக்கும், நிலத்திற்கும் பட்டா வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோவிந்தசாமியின் குடிசையை வனத்துறையினர் தீயிட்டு எரித்துள்ளனர். அப்போது, கோவிந்தசாமி குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்ததால், அனைவரும் உயிர்தப்பியுள்ளனர். எனினும் விவசாயி குடும்பத்தாரின் துணிமணிகள், பெட்டிகள், குழந்தைகளின் பாடபுத்தகங்கள் அனைத்தும் தீக்கிரையாயின. தீக்கிரையான குடிசையை யும், விவசாயி குடும்பத்தாரையும், மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலாளர் இரா.சர வணன், மாவட்டத் தலைவர் பொன்னுசாமி, விவசாயிகள் சங்க மா.தலைவர் டி.கே.வெங்க டேசன் ஆகியோர் பார்வையிட்டு விவ சாயிக்கு ஆறுதல் கூறினர். இதுபோன்ற விவசாயிகளின் குடிசை எரிப்பு சம்பவங்கள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்னரும் ஜவ்வாதுமலைப்பகுதி யில் நடந்துள்ளது. அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மார்க்சிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். அதையொட்டி, கடந்த 2016 நவம் பர் மாதம் திருவண்ணாமலை கோட்டாட்சி யர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் தன்னப்பன், கோட்டாட்சியர் உமாமகேஸ் வரி, கலசபாக்கம், போளூர் வட்டாட்சியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் மக்கள் அனுபவங்களி லுள்ள நிலங்களை ஆய்வு செய்து அதன டிப்படையில் பட்டா வழங்குவது சம்மந்த மான நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. முதலில் அனு பவித்து வரும் நில உரிமையாளர்களின் பெயர் பட்டியல் எடுத்து பின், விசாரணை செய்வது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த முடிவு, நடப்பு 2019 ஆம் ஆண்டு முடிவடை யும் நிலையிலும், அமலாகாத நிலையில் மக்கள் அனுபவித்து வரும் நிலங்களில், வனத்துறையினர் தீவைப்பது மலைவாழ் மக்களை பயமுறுத்தி விரட்டியடிப்பது என அராஜகமான முறையில் நடந்து கொள்கின்றனர். அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அரசுத்துறையே இவ்வாறு நடந்து கொள்வது முறையற்ற செயலாகும் எனவே மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டு மேற்படி மலைகிராம மக்க ளுக்கு பாதுகாப்பு அளித்திடவும், அத்துமீற லில் ஈடுபட்ட வனத்துறையினர் மீது நடவ டிக்கை எடுத்து, மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களை, அவர்களுக்கே பட்டா வழங்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.