திருவண்ணாமலை, நவ. 19- திருவண்ணாமலை மாவட்டம், தண்ட ராம்பட்டு வட்டம், தரடாப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தலித் மக்கள் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த னர். அதில், நாங்கள் குடும்பத்துடன் வசிப்ப தற்கு சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே, ஆதிதிராவிடர் நலத் துறை மூலமாக எங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.