tamilnadu

img

மயான ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை: போராட்டம் ஒத்திவைப்பு

திருவண்ணாமலை, ஆக. 16- திருவண்ணாமலை மாவட்டத்தில் அருந்த தியர் இன மக்களின் மயானங்களில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றி, அடிப்படை  வசதிகளை ஏற்படுத்தக் கோரி சனிக்கிழ மையன்று (ஆக. 15) கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, தலித் விடு தலை இயக்கம் உள்ளிட்ட அமைப்பு கள் திட்டமிட்டிருந்தன. இதுதொடர்பான அமைதிக் கூட்டம் வெள்ளியன்று (ஆக.14) ஆதிதிராவிடர் நல   தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்துக்கு ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நல அலுவலர் கதிர்சங்கர் தலைமை வகித்தார். இதில் தலித் விடுதலை இயக்கம், தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விசிக,  அம்பேத்கர் எழுச்சி இயக்கம், அருந்ததியர் மக்கள் நலச்சங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் மற்றும்  போளூர்,  செங்கம், வந்தவாசி வட்டங்களின் ஆதிதிரா விடர் நல தனி வட்டாட்சியர்கள், அரசு அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கதிர் சங்கர் மாவட்  டத்தில் அருந்ததியர் இன மக்கள் பயன்ப டுத்தும் மயானங்களில் உள்ள ஆக்கிர மிப்புகள் ஒரு மாதத்துக்குள் அகற்றப்படும். 2 மாதங்களுக்குள் மாவட்டத்தில் உள்ள  அனைத்து அருந்ததியர் மற்றும் ஆதிதிராவி டர் மக்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு புறம்போக்கு நிலம் குறித்த கணக்கெடுப்பு நடத்தி அந்த இடத்தை மயானமாகப் பயன்ப டுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அருந்ததியர் இன மக்கள் பயன்படுத்தும் மயானங்களில் பாதை வசதி,  காரிய மேடை, தெரு விளக்கு, சுற்றுச்சுவர், எரிமேடை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவது தொடர்பாக ஆய்வு நடத்தி, உரிய முன்மொழிவுகள் 6 மாதங்களுக்குள் அளிக்கப்படும் என்று உறுதிஅளித்தார். இதையடுத்து நடைபெற இருந்த  கருப்புக்  கொடி போராட்டம்  ஒத்தி வைக்கப்பட்டது.