திருப்பூர், அக்.4- திருப்பூரில் மதுபோதையில் ஏற்பட்ட தக ராறில், இளைஞரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கோல்டன் நகர் பகு தியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (35). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவ ருக்கும், அதே பகுதியில் உள்ள செல்வம் எனபவருக்கும் பெயிண்ட் காண்ராக்டுகள் தொடர்பாக தகராறு இருந்து வந்ததது கூறப் படுகிறது. இந்நிலையில், சனியன்று இரவு மது போதையில் இருந்த சுரேஷ்குமார் ஆடையின்றி செல்வம் வீட்டின் அருகே விழுந்து கிடந்துள்ளார். இதனைக்கண்ட செல்வம் சுரேஷ்குமாரை எச்சரித்து வீட் டுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
அப் போது, இருவருக்கும் கடும் வாக்குவதாம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த செல்வம் அருகில் இருந்த கல்லை எடுத்து சுரேஷ்குமார் தலையில் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சுரேஷ்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரி சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செல்வத்தை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.