திருப்பூரில் மாநகர காவல்துறை சார்பில் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காவல்துறை மூலம் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 வாகனங்களை இன்று மாநகர காவல்துறை ஆணையர் பத்ரிநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சென்றதாக 40 வழக்குகள் பதியப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் திருப்பூர் ஊரகப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் , மாநகர காவல் துறை சார்பில் 30 வாகனங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளன, இவை பகுதி வாரியாக சென்று பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளன என்றார்.