திருப்பூர், நவ. 24 – காலத்தால் மிக இளமையான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூல் உலகில் பெரும்பான்மை மக்களி டம் செல்வாக்குச் செலுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தெரிவித்தார். திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தியாகி பழனிச்சாமி நிலை யத்தில் 10 நாள் காலை நேர தொடர் வகுப்பு ஞாயிறன்று தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு தொடர்ந்து 10ஆவது ஆண்டாக நடத்தும் இந்த வகுப்பு தினமும் காலை 6.30 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெற்று 7.30 மணிக்கு முடிவடையும். முதல் நாள் வகுப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் தலைமை வகித் தார். இதில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி குறித்து ஆர்.பத்ரி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், உலகில் பைபிள், குர்ஆன் நூல்க ளுக்கு அடுத்த படியாக மூன்றாவ தாக அதிகளவில் விற்பனையா கும் நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. உலகின் பல மொழி களில் பதிப்பிக்கப்பட்டுள்ள இந் நூல் விஞ்ஞான அடிப்படையில் கம்யூனிஸத்தின் கருத்துகளைக் கூறுவதாக உள்ளது. இன்று உல கில் வளர்ந்த முதலாளித்துவ சமு தாயங்களில் வாழும் மக்கள் தொகையைவிட, சோசலிச அடிப் படையிலான உற்பத்தி முறையில் செயல்படும் சீனா உள்ளிட்ட நாடுகளில் வாழும் மக்கள்தொகை அதிகம். முதலாளித்துவத்துக்கு முந்தைய நிலப்பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவ, காலனிய தன் மையுள்ள நாடுகளில் கணிசமான மக்கள் வாழ்கின்றனர். அவர்களை மீட்டெடுக்கக்கூடியதாக கம்யூ னிஸ்ட் தத்துவம் உள்ளது. பைபிள் நூல் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள், குர்ஆன் நூல் சுமார் 1400 ஆண்டுகள் பழமையானது. அதேசமயம் காலத்தால் மிக இள மையான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியாகி 171 ஆண்டு கள் ஆகிறது. எனவே கம்யூனிஸ்ட் தத்துவத்தின் அடிப்படை உண் மையை இப்போதே சோசித்துப் பார்ப்பது போதுமானதாகவும், பொருத்தமாகவும் இருக்காது. அதேசமயம் உலகில் வெளிவந்த அரசியல் நூல்களான ரூஸோ வின் சமுதாய ஒப்பந்தம், சாசன இயக்கத்தின் நூல், அமெரிக்க விடுதலை குறித்த நூல்களை விட அதிகமான அளவு விற்பனை யாகி, அதிக மக்களிடம் செல்வாக் குச் செலுத்துவதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளது. பல்வேறு கரடுமுரடான பாதைகளையும், போராட்டங்களையும் கடந்து கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றிகர மாக முன்னேறி வருகிறது என்று குறிப்பிட்டார். இந்த அமர்வில் காலை 6 மணி முதலே திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சி அணி யினர், இளைஞர்கள், மாணவர் கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.