திருப்பூர், ஜூன் 25 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மனுக் கொடுக்கும் இயக்கத்தில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். அனைத்துக் கிராமங் களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்டக் கோரிக்கைகளை வலி யுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று திருப்பூர் மாவட்டத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 14 மையங்களில் நடை பெற்ற இப்போராட்டத்தில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழி லாளர்கள் ஆவேசத்துடன் பங்கேற் றனர். சட்டக்கூலி ரூ.229ஐ குறைக் காமல் முழுமையாக வழங்க வேண்டும். சுழற்சி முறையில் வேலை கொடுப்பதை தவிர்த்து அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள, வேலை அட்டைப் பெற் றுள்ள அனைத்து தொழிலாளர் களுக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் வறட்சி பாதித்த மாவட்டங்களாக மத்திய, மாநில அரசுகள் உடன் அறிவித்து நிவாரணப் பணி களை துவங்க வேண்டும். அனைத்து ஊராட்சிக் குடியிருப்புப் பகுதிகளுக்கும் பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்க வேண்டும். 100 நாள் வேலை நாட்களை 150 நாட்களாகவும், சட்டக்கூலியை ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
பல்லடம்
பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ. பஞ்சலிங்கம், நிர்வாகிகள் எஸ்.துரைசாமி மற்றும் ஆர்.பரமசிவம், ப.கு.சத்தியமூர்த்தி தலைமை ஏற் றனர். இதில் 400 பேர் பங்கேற் றனர்.
உடுமலை
உடுமலையில் ஒன்றிய நிர் வாகிகள் ஆர்.மாசாணி, எம்.ரங்க ராஜ் மற்றும் சி.முத்துச்சாமி, எம்.ரமேஷ் ஆகியோர் தலைமையில் 220 பேர் பங்கேற்று மனு அளித் தனர்.
மடத்துக்குளம்
மடத்துக்குளத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.சுப்பிர மணியம், எம்.ஆறுமுகம், எஸ். பழனிச்சாமி ஆகியோர் தலை மையில் 150 பேர் பங்கேற்றனர்.
அவிநாசி
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏ.சண்முகம், எஸ்.மல்லப்பன், ஆர்.பழனிச்சாமி, வி.பி.முருகேசன் ஆகி யோர் தலைமையில் கரும்பு விவ சாயிகள் சங்க மாநில குழு உறுப் பினர் வெங்கடாசலம், விவ சாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகி முத்துரத்தினம், சிஐடியு சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ராஜன், ஒன்றிய தலைவர் ஆர்.வேலுச்சாமி ஒன்றிய செய லாளர் பி.கனகராஜ், சங்க நிர்வாகிகள் குருநாதன், சண்முகம், பொன்னுசாமி, குப்புசாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் ஆர்.மணியன், கே. பிரகாஷ், வி.பி.பழனிச்சாமி உள் ளிட்டோர் தலைமையில் சுமார் நூறு பேர் பங்கேற்றனர்.
குடிமங்கலம்
குடிமங்கலத்தில் சங்க நிர்வா கிகள் வி.தம்புராஜ், ஆறுச்சாமி ஆகி யோர் தலைமையில் சுமார் 50 பேர் பங்கேற்று மனு அளித்தனர்.