அவிநாசி, அக். 9- அவிநாசி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் அனுமதியின்றி மது விற்பனை செய்யப் படுவதாகவும், மது அருந்தப்படுவதாகவும் காவல் துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவிநாசி, தெக்கலூர், கருவலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உண வகங்களில் காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது, 8 உணவகங்களில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதும், மது அருந்த அனுமதித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவிநாசி காவல் துறையினர் வழகு குப்பதிவு செய்து 8 உணவக உரிமையாளர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.