tamilnadu

img

அகற்றப்பட்ட தண்ணீர் குழாய் மீண்டும் நிறுவ மக்கள் கோரிக்கை

திருப்பூர், நவ. 21- திருப்பூர் மாநகராட்சி 2 ஆவது வார்டு ஆத்துப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயில் வீதியில் சாக்கடை அமைப்ப தற்காக அகற்றப்பட்ட தண்ணீர் குழாயை மீண்டும் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.மாரப்பன், ஆத்துப்பாளை யம் கிளைச் செயலாளர் ஜெ.சங்கர் தலை மையில் அப்பகுதி மக்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர், முதலாவது மண்டல அலுவ லகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பட்டத்தரசி அம்மன் கோயில் வீதியில் ஒரேயொரு குழாய் மட்டுமே இருந்தது. சாக் கடை கால்வாய் அமைப்பதற்காக அதை அகற்றினர். ஆனால், அதன் பிறகு இதுவரை அங்கு தண்ணீர் குழாயை நிறுவவில்லை. எனவே இப்பகுதி மக்களின் அத்தியாவ சியத் தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக அங்கு குடிநீர் குழாய் அமைத் துத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;