tamilnadu

img

திருப்பூரில் பி.சீனிவாசராவ் நினைவு கருத்தரங்கம்

திருப்பூர், செப். 30- கீழ்தஞ்சை மாவட்டத்தில் விவ சாய கூலித் தொழிலாளர்களை சாதி அடிமைத்தனத்தில் இருந்து  விடுவித்து தலைநிமிர வைத்து வர்க்க உணர்வூட்டிய தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி  சார்பில் திருப்பூர் பி.ஆர்.நிலை யத்தில் திங்களன்று நடைபெற்ற கருத்தரங்கிற்கு தெற்கு நகர செயலாளர் எஸ்.சுந்தரம் தலைமை  ஏற்றார். தெற்கு ஒன்றியச் செய லாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஆர்.குமார்  முன்னிலையில் மாவட்டச் செய லாளர் ச.நந்தகோபால், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சம்சீர்  அகமது, பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க செயற்குழு உறுப் பினர் ஏ.ரமேஷ் ஆகியோர் உரை யாற்றினார். ஆசிரியர் கூட்டணி யின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் செ.நடேசன் சிறப்புரை ஆற்றினார். இதில்  திரளானோர் கலந்து கொண் டனர். முன்னதாக பி.சீனிவாசராவ் உருவப்படத்துக்கு அனைவரும் முஷ்டி உயர்த்தி முழக்கம் எழுப்பி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
உடுமலை
இதேபோல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடுமலை நகர  கமிட்டியின் சார்பில் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தின சிறப்பு  பேரவைக் கூட்டம் ஸ்டாலின் நிலையத்தில் ஆசிரியர் செல்லத் துரை தலைமையில் திங்களன்று நடைபெற்றது.
மடத்துக்குளம்
மனித உரிமை போராளி தோழர் பி.சீனிவாசராவ் 58ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன் னிட்டு, மடத்துக்குளம் வட்டம்  மெட்ராத்தி ஊராட்சி இராமே கவுண்டன்புதூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு சங்க தலைவர் சி. சுப்பிரமணியம், சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், மடத்துக்குளம் தாலுகா செய லாளர் ஆர்.ஆறுமுகம் உள்பட திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.