tamilnadu

பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து - துணிகள் எரிந்து சேதம்

திருப்பூர், ஆக. 4 - திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் திடீ ரென ஏற்பட்ட தீ விபத்தில் நிறுவனத்திலிருந்த துணி கள் எரிந்து சேதமாகியது. திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தண்ணீர்ப் பந்தல் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதனிடையே செவ்வாயன்று காலை ஏற்றுமதி நிறுவனத்தின் முதல் தளத்திலிருந்து, புகை வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தக வலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். நிறுவனத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் நிறுவனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பின்னலாடைத் துணிகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.