திருப்பூர், டிச. 1- தமிழகத்தில் பாலில் நச்சுத் தன்மை அதிகமாக இருப்பதாக மத்திய அமைச்சர் கூறியிருக்கும் நிலையில் உண்மை நிலை பற்றி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண் டும் என்று விவசாயிகள் வலியு றுத்தி உள்ளனர். திருப்பூர் மாவட்ட விவசா யிகள் குறைதீர்க் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பர மசிவம் கூறியதாவது: பால் உற்பத்திக்கான செலவு விவசாயி களுக்கு பல மடங்கு இன்றைக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலை யில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட பால் மாதிரிகளில் தான் நச்சுத் தன்மை மிக அதிகமாக உள்ளதாக மத்திய அமைச்சர் சொல்கிறார். நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் பாலை ஆவினும், 1கோடியே 5 லட்சம் லிட்டர் பாலை தனியார் பால் நிறுவனங்களும் கொள்முதல் செய்கின்றன. நச்சுத்தன்மை இருப்பது தனியார் பாலிலா அல் லது ஆவின் நிறுவனத்திலா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பொத்தாம்பொதுவாக குற்றம் சாட்டினால், பால் உற்பத்தியா ளர்கள் கடுமையாக பாதிக்கப்படு கிறார்கள். இது தொடர்பாக தெளி வுபடுத்துவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அர சுக்கு உள்ளது. ஆய்வகங்கள் அமைத்து பாலின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டந் தோறும் உள்ள ஆவின் ஒன்றியங் களில் பாலின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார். மவுனகுருசாமி: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை, அமராவதி மற்றும் திருமூர்த்தி மலை பகு தியில் உள்ள பாசனப் பரப்பு களை காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக தொடர்ந்து நாசம் செய்கின்றன. மக்காச்சோளம் உட்பட தானியப் பயிர்களை பயி ரிடும் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். தற் போது காட்டுப்பன்றி தாக்கி இரு விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிலர் கிராமங்களை காலி செய்யும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே காட் டுப்பன்றிகளுக்கு வேலி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். ஈஸ்வரமூர்த்தி: தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்திருப் பதால், அமராவதியில் தண்ணீர் வரத்து உள்ளது. தற்போது பழைய அமராவதி பாசனப் பரப்பில் சாகுபடி பணிகள் தொடங்கப்பட் டுள்ளன. தற்போது அணையில் 62 அடி தண்ணீர் உள்ளது. ஆகவே இருக்கின்ற தண்ணீரை முறை யாக பிரித்து தர வேண்டும். பழனிசாமி: அலங்கியம் அம் மன் கோயில் பகுதியில் குரங்கு கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பொது மக்களுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது. ஆகவே தாராபுரம் வனத்துறையினர் குரங்குகளை அப்புறப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நிம் மதியை உறுதிப்படுத்த வேண் டும். அலங்கியத்தில் அமைந்துள்ள உலர் களம் சேதம் அடைந்துள் ளது. அதனை சீரமைத்துத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். எஸ்.ஆர். மதுசூதனன்: மக் காச்சோளத்துக்காக நடப்பாண் டில் விவசாயிகள் நிறைய செலவு செய்துள்ளனர். அதிலும் குறிப் பாக ஒரு ஏக்கருக்கு ரூ. 6000 வரை செலவழித்து மருந்து அடித்துள் ளனர். எப்போதும் இல்லாத அள வுக்கு கூடுதல் செலவு பிடித்துள் ளது. ஆனால் அவர்களுக்கான விலை என்பது போதிய அளவில் கிடைக்கவில்லை. தனியார் கால் நடைதீவன நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்துகொண்டு விவசா யிகளுக்கு உரிய விலை தருவ தில்லை. குறைந்தபட்ச விலையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்ய வேண்டும். உடுமலை பேருந்து நிலையத்தில் பூ விற்ப வர்களுக்குக்கூட நகராட்சி நிர்வாகம் ரூ. 300 சுங்கம் வசூ லிக்கிறது. இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி, ஆட்சியர் உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். ஆட்சியர் விஜயகார்த்தி கேயன்: ஆவின் அலுவலர்கள் மற்றும் மாவட்ட உணவு பாது காப்பு அலுவலர்கள் ஆய்வு செய்யச் சொல்வோம். இது தொடர்பாக அரசுக்கும் தெரிய பப்டுத்துவோம். கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவ சாயிகளின் பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த அலு வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.