திருப்பூர், ஜூலை 31– திருப்பூர் மாநகராட்சி, பச்சை யப்பா நகர் குடியிருப்பில் நீண்ட காலமாக சாக்கடை தூர்வாரப்படாம லும், முறையாக தண்ணீர் வழங்கா மலும் இருக்கும் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும், பணி செய்ய விடாமல் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ சு.குணசேகரன் முட்டுக் கட்டை போடுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 34வது வார்டுக்குட்பட்ட பச்சையப்பா நகர் குடியிருப்பில் 85 வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 350 பேர் வசித்து வரு கின்றனர். கடந்த 20 வருடங்களாக இங்கிருக்கும் சாக்கடை பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளன. சாக்கடை அடைத்து கழிவுநீர் வெளி யேற வழியின்றி துர்நாற்றம் வீசுவது டன், புழுக்கள் உற்பத்தி ஆகி நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இ
து குறித்து சுகாதார ஆய்வாளரிடம் இப்ப குதி மக்கள் புகார் அளித்தும், முழுமை யாகத் தூர்வாராமல் கிடப்பில் போட் டுச் சென்றனர். இது தவிர இங்குள்ள மூன்று ஆழ் குழாய் கிணறுகளில் இருந்து பொது உபயோகத்துக்கு தண்ணீர் விநியோ கம் செய்யப்பட்டாலும் வீட்டுக்கு இரு குடம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு குழாயில் மின்மோட்டார் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது.
எனவே இப் பகுதி தண்ணீர் பிரச்சனைக்கும் முறை யான தீர்வு காண வேண்டும் என்று பச்சையப்பா நகர் பொது மக்கள் வற்பு றுத்தி உள்ளனர். இது தொடர்பாக இப் பகுதி பொது மக்கள் மற்றும் பெண்கள், மார்க்சிஸ்ட் கட்சியினருடன் கடந்த ஜூலை 3ஆம் தேதி வெள்ளியன்று நல்லூர் மூன்றாவது மண்டல அலுவ லகத்திற்குச் சென்று அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அதன் பிறகும் முழு மையாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மனுக் கொடுத்தும் வேலை நடைபெறாதது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் இப்ப குதி மக்கள் கேட்டபோது, திருப்பூர் தெற்கு எம்எல்ஏ சு.குணசேகரனிடம் ஒரு முறை சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளனர். பல ஆண்டுகளாக இப் பிரச்சனை தொடர்கிறது.
இதே பகுதி யில்தான் எம்எல்ஏ குடியிருக்கிறார். மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அவரே இப்பிரச்சனையை அறிந்து, குறைகளை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஆனால் என்ன காரணத் தாலோ அவர் இப்பிரச்சனையைத் தீர்க்க விடாமல் முட்டுக்கட்டைப் போட்டு வருகிறார் என்று பெண்கள் கூறினர். மாநகராட்சி அதிகாரிகளிடம் மனுக் கொடுத்து ஏறத்தாழ 25 நாட்கள் கடந்த நிலையில் ஜூலை 27ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிட மும் இப்பகுதி மக்கள் மனு அளித்துள் ளனர்.
அதன் பிறகும் பிரச்சனையைத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக் கவில்லை. மக்கள் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய எம்எல்ஏ குணசேக ரன் குறுகிய உள்நோக்கத்துடன் இப் பிரச்சனைக்கு முட்டுக்கட்டைப் போட்டுவருவதாக பச்சையப்பா நகர் மக்கள் பெரும்பான்மையானோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அவர்கள் குற்றம் சாட்டுவது உண்மைதான் என நம்பும் வகையில் மாநகராட்சி அதிகா ரிகளும் அங்கு பணி செய்யாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். இப்பணி நடைபெறாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டத்திற்கும் தயாராக இருப்ப தாக அப்பகுதியைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கட்சியினர் கூறினர்.