அவிநாசி, மார்ச் 2- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்த மான மண்டபத்தில் மதப் பிரிவினையை ஏற்படுத் தும் சிஏஏ ஆதரவு பிரச்சாரம் மேற்கொண்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவிநாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான திருமண மண்டபம் அப்பகுதியில் அமைந்துள்ளது. இம்மண்டபம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகின்றது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என விதி இருக்கிறது. ஆனால் இந்து முன்னணியின் சார்பில் சிஏஏ ஆதரவாகவும், மறைந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச் சியும் இம்மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்து முன்னணி கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அவிநாசி கோயில் அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அனுமதி பெற்று விட்டார்கள். ஆனால் சிஏஏ ஆதரவு கூட்டம் என அனுமதி பெறவில்லை என்றார். மேலும், எல்லாக் கட்சிகளுக்கும் மண்டபம் வழங்கப்படுமா என்று கேட்டதற்கு மழுப்பலான பதில் கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார். எனவே, இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறா வண்ணம் தடுக்க மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.