தாராபுரம், செப். 21 - தாராபுரம் அமராவதி பாலம் அருகில் சாலையோ ரங்களில் குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கருர், மூலனூர் மற்றும் பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம் நகருக்குள் வர அமராவதி ஆற்றுப்பாலம் வழியாக இச்சாலையை வாகன ஓட்டிகள் பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலையின் ஓரங்களில் உள்ள குப்பை களுக்கு பகல் நேரங்களில் மர்ம நபர் களால் தீ வைக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமா கக் காட்சியளிக்கிறது. இந்தச் சாலை வழியாகத்தான் ஈஸ்வரன் கோவிலுக்குப் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். புகை மண்டலம் கார ணமாக வாகனஓட்டிகள் சாலை தெரியா மல் அவதிப்படுகின்றனர். அடிக்கடி வைக்கப்படும் தீயால் சில சமயங்களில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியா மல் விபத்து ஏற்படுகிறது. எனவே குப்பை களுக்கு தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.