அவிநாசி, டிச. 2- அவிநாசி காவல் சரகத் திற்குட்பட்ட இரண்டு காவ லர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவினாசியை அடுத்த சேவூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந் தவர் ராம்பிரகாஷ். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவிநாசி பகுதியின் உளவுப்பிரிவு காவலராக பணி மாறுதல் பெற்றார். இந்நிலையில் இவர் மீது பெறப்பட்ட பல்வேறு புகா ரைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதேபோல குன்னத் தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ராஜீவ் காந்தி என்பவரும் ஓழுங்கீன நடவடிக்கை தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளார்.