tamilnadu

img

சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

அவிநாசி, பிப். 2- அவிநாசி அருகே சேவூர் அரசுமேல் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அவிநாசி ஒன்றியம், சேவூரில் 75 வருடங்களுக்கு மேலாக  மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 1998ம் ஆண்டு வரை அரசு உயர் நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந் தது. சுமார் 500 மாணவ, மாணவியர் கள் படித்து வந்தனர். 1999 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த் தப்பட்டது. நபார்டு வங்கி உதவியுடன் தற்போது 46 வகுப்பறைகள் கட்டப் பட்டு, 36 ஆசிரியர்கள், 3 அலுவலர்க ளுடன் 1020 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பில் 95 சதவிகிதமும், 12 ஆம் வகுப்பில் 99 சதவிகிதம் மாண வர்கள் தேர்ச்சி அடைந்தனர்.  இந்நிலையில் பள்ளியில் ஆண்டு விழா சனியன்று நடைபெற்றது.  இவ்விழாவில் தலைமையாசிரியர் ஜெ.பாஸ்கரன் வரவேற்று. உதவி தலைமையாசிரியர் தனசேகரன் ஆண்டறிக்கை வாசித்தார். கோவை, ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷின் வித்யால யத்தை சேர்ந்த சுவாமி யோகாம்ருதா னந்தர் தலைமை வகித்தார். நகைச் சுவை பேச்சாளர் கு.ரா.மஞ்சுநாதன், கோவை சிபி, ஐ.ஏ.எஸ் அகாடமி நிறு வனர் அரங்ககோபால் ஆகியோர் சிறப் புரையாற்றினர். இப்பள்ளியின் முன் னாள் தலைமையாசியர்கள் கே.ல லிதா, எம்.நல்லதங்காள் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். இதை தொடர்ந்து விளையாட்டு போட்டி மற் றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர் களின் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் இடம் பெற்றன. நிகழ்ச்சியில் முன் னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சிலர் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தனியார் பள்ளிகளை பெற்றோர்கள் நாடிச் செல்லும் இந்தச் சூழ்நிலையில், இது போன்ற விழாக்கள் அரசுப் பள்ளி ஆசி ரியர்கள் மற்றும் மாணவர்களை உற்சா கப்படுத்தும். இதனால் மாணவர் சேர்க் கையும் அதிகரிக்கும். ஆண்டுதோறும் இதேபோல ஆண்டு விழா நடைபெற வேண்டுமென தெரிவித்தனர். இறுதி யாக ஆசிரியர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.