திருப்பூர், அக்.1- திருப்பூர் ஊத்துக்குளியில் அனைத்து கட்சிகளின் போராட்ட எதி ரொலியாக பொதுமக்களுக்கு இடை யூராக இருந்த ஆவின் பாலகத்தை மாற்றி அமைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் நகரில் போக்கு வரத்துக்கு இடையூறாகவும், பேரூ ராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத் தும் வகையிலும் ஆளும் கட்சியின ரால் ஆவின் பாலகம் அமைக்கப்பட் டுள்ளது. இதனை அகற்றக்கோரி செப்.30 ஆம் தேதியன்று காலை குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத் தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் படும் என திமுக, காங்கிரஸ், மார்க் சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார் பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைய டுத்து கடந்த செப்.26 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனைத்தொடர்ந்து திட்டமிட்ட படி போராட்டம் நடைபெறவிருந்த நிலையில், செப்.30 ஆம் தேதியன்று காலை போக்குவரத்துக்கு இடையூ ராக இருந்த பாலகத்தின் வாசற் படி இடித்து அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்ட குழு தலைவர் களை தொடர்பு கொண்ட காவல்துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட பால கத்தை மாற்றியக்க நடவடிக்கை மேற் கொள்வதாக உறுதியளித்தனர். இதை யடுத்து போராட்டக்குழு தலைவர்கள் கலந்து பேசி போராட்டத்தை தற்காலி கமாக ஒத்திவைப்பதாக அறிவித்த னர். மேலும், இதுதொடர்பாக குன்னத் தூர் பேருந்து நிலைய வளாகத்தில் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய செயலாளர் செ.சுப்பிரமணி, திமுக பேரூர் செயலாளர் சி.என்.சக்திவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் பி.பி. ஈஸ் வரமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், காங்கிரஸ் கட்சியின் வி.வி.சர்வேஸ்வ ரன், கே.ஏ.சந்திரன், எஸ்.எம்.குப்பு ராஜ், எஸ்.பி. காளிதாஸ், சிபிஐ சார் பில் பி.வெள்ளியங்கிரி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சீர.அய்யாவு, ஊத்துக்குளி ஊராட்சி ஒன் றிய சேர்மன் பிரேமா ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.