tamilnadu

img

பாதியில் நிற்கும் கழிவுநீர் வடிகால் பணி: குடிநீர் குழாய்களில் சாக்கடை கலக்கும் ஆபத்து

திருப்பூர், நவ. 4- திருப்பூரில் பாதியில் நிற்கும் கழிவு நீர் வடிகால் பணியால், சாக்கடை நீர் வெளியேறி குடிநீர் குழாய்களில் கலக் கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் வெங்கமேட்டில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையோ ரம் கழிவுநீரும், மழைநீரும் கலந்து சாலையோரம் பெருமளவு தேங்குகி றது. இந்நிலையில், நகரின் வடக்குப் பகுதியில் பாண்டியன் நகர், இந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாந கராட்சி நிர்வாகம் புதிதாக கழிவுநீர் வடிகால் கட்டியது. ஆனால், போதிய நிதி இல்லை என காரணம் சொல்லி, பசுமை நகர் பகுதி அருகே அந்த வடி கால் பணி பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், கழிவுநீர் வடிந்து செல்வதற்கு உரிய ஏற்பாடு இல்லாத நிலையில், இந்த வடிகாலில் குடி யிருப்புகளில் இருந்து சாக்கடை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், தற்போது பலத்த மழை பெய்ததால், இந்த வடிகாலில் சாக்கடை நீருடன், மழைநீரும் கலந்து வெளியேறியது. அது அங்கேரி பாளையம் பிரதான சாலையில் பெருக் கெடுத்துச் செல்கிறது. இந்த சாலை யோரம் திருப்பூர் மாநகராட்சி 2ஆவது வார்டு, 4ஆவது வார்டு மற்றும் 7 ஆவது வார்டு ஆகிய பகுதிகளுக்கு மூன்றாவது குடிநீர் திட்டத்தின் குடி நீர் குழாய்கள் செல்கின்றன. தற்போது  மழைநீருடன், கழிவுநீரும் கலந்து பாதி யில் நிற்கும் வடிகாலில் வெளியேறி வந்து, இந்த குடிநீர் குழாய்கள் பதிக் கப்பட்டிருக்கும் பகுதியில் தேங்கி நிற் கின்றன.  இதனால் குடிநீர் குழாயில் கசிவு அல்லது உடைப்பு ஏற்பட்டால் மூன்று வார்டுகளுக்குச் செல்லும் இந்த குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து செல்லக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள் ளது.

இந்த மூன்று வார்டுகளில் மட்டும் ஏறத்தாழ 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. எனவே, குடிநீரில் கழிவுநீர் கலந்தால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீரில், கழிவுநீர் கலக் கும் ஆபத்து இருப்பதைப் புரிந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகம், கழிவுநீர் வடிகால் பணியை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். சாக் கடை கால்வாய் குடிநீரில் கலக்கும் நிலையைத் தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு உறுப்பினரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கே.மாரப்பன் வலியுறுத்தியுள்ளார்.