tamilnadu

img

சாலை விபத்தில் தீ பிடித்து எரிந்த லாரி

ஆம்பூர், ஜுன் 20- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் வசிப்பவர் சுதாகர். இவர் பாதுகாவலர் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து வாணியம்பாடியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பெங்க ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி முன்னாள்  சென்று கொண்டிருந்த சுதா கரின் இருசக்கர வாக னத்தின் மீது மோதியதில் சுதகார் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனம் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டதில், வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு லாரி தீ பிடித்து எரிய ஆரம் பித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரி  மற்றும் இருசக்கர வாகனம்  முற்றிலும் எரிந்து நாசமா னது. பின்னர் சம்பவ இடத் திற்கு வந்த ஆம்பூர் வட் டாட்சியர் பத்மநாபன், வட்ட வழங்கல் அதிகாரிகள்,  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் லாரியில் இருந்தது கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி என்பது தெரிய வந்தது. இதையடுத்து லாரியில் இருந்த 6 டன் ரேஷன் அரி சியை பறிமுதல் செய்த னர். தப்பி ஓடிய லாரி  ஓட்டுநரை தேடி வருகின்ற னர்.