tamilnadu

கன்னியாகுமரி- குற்றாலம் மார்க்கத்தில் ரயில் பாதை அமைக்க கோரிக்கை

திருநெல்வேலி, ஆக.4- கன்னியாகுமரியில் இருந்து குற்றா லத்திற்கு களக்காடு வழியாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரி க்கை விடுத்துள்ளனர் நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு வளர்ந்து வரும் நகரமா கும். தொழில் துறை, விவசாய துறைக ளில் முன்னோக்கி செல்கிறது. தென்  மாவட்டங்களில் முக்கிய சுற்றுலா  தலமாக தலையணை அமைந்துள்ள தால் சுற்றுலா துறையிலும் முக்கிய த்துவம் பெற்று திகழ்கிறது. அதோடு  ராமர் வழிபட்டதாக நம்ப படும்  சத்திய வாகீஸ்வரர் திருக்கோவிலும் அமைந்து ள்ளதால் ஆன்மீக தலமாகவும் திகழ்கிறது. களக்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தினசரி தொழில் நிமித்தமாகவும், மற்ற தேவைகளுக்காகவும் செ ன்னை, திருச்சி, மதுரை மற்றும் வெளி யூர்களுக்கு சென்று வருகின்றனர். தொ லைதூர நகரங்களுக்கு செல்வோர் ரெயில்களில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். பெண்கள், முதியவர்கள் பயணம் செய்ய ரெயில்களையே நம்பி உள்ள னர். ஆனால் களக்காடு பகுதி பொதுமக்கள் ரெயிலில் செல்ல வே ண்டுமானால் நாங்குநேரிக்கோ, வள்ளி  யூருக்கோ, நெல்லைக்கோ செல்ல வேண்டியுள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சென்று ரெயில்களை பிடி ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் சுற்றுலா தலங்களான கன்னியா குமரிக்கும், குற்றாலத்திற்கும் நேரடி யாக ரெயிலில் செல்ல முடியாத நிலை  நிலவுகிறது. குற்றாலம் வரும் சுற்றுலா  பயணிகள் அங்கிருந்து கன்னியா குமரிக்கு செல்ல நெல்லை வழியாக செல்ல வேண்டியதுள்ளது. எனவே குற்றாலம், கன்னியாகுமரியை இணை க்கும் வகையில் களக்காடு வழியாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் நீண்ட கால மாக வலியுறுத்தி வருகின்றனர். தற்போது வள்ளியூர் மற்றும் சேர ன்மாதேவியில் ரெயில் பாதை உள்ளது.  இதனை இணைக்கும் வகையில் சேரன்  மாதேவியில் இருந்து களக்காடு, திரு க்குறுங்குடி, ராஜபுதூர் வழியாக வள்ளி யூருக்கு இணைப்பு ரெயில் பாதை அமைத்தால் போதும். இவ்வாறு களக்காடு வழியாக ரெயில் பாதை அமை த்தால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு, வள்ளியூர், களக்காடு, சேரன்மாதேவி வழியாக ரெயில் இய க்கவும் வழி பிறக்கும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது போல் களக்காட்டில் இருந்து குற்றா லத்திற்கும், நெல்லைக்கும், நாகர் கோவிலுக்கும் பயணிகள் ரெயில் இய க்கவும் முடியும். இதனால் பஸ்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் குறை யும் என்பது பொதுமக்களின் நம்பி க்கையாக உள்ளது. களக்காட்டில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மற்றும்  ஆராய்ச்சி நடத்த வரும் ஆராய்ச்சியா ளர்கள் நெல்லைக்கு வந்து அங்கி ருந்து வாகனங்களில் களக்காடு வருகி ன்றனர். களக்காடு வழியாக ரெயில்  இயக்கப்பட்டால் அவர்கள் நேரடியா கவே களக்காட்டிற்கு வரலாம். எனவே களக்காடு வழியாக ரெயில் பாதை அமைத்து வெளியூர்களுக்கு ரெ யில்கள் இயக்க ரெயில்வே துறையி னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.